தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் கடந்த முறை நடைபெற்ற நிலையில், போதிய உறுப்பினர்கள் வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் ஒன்றியத் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவைச் சேர்ந்த ஆறாவது வார்டு உறுப்பினர் சசிகலா என்பவருக்கும், ஏழாவது வார்டு உறுப்பினர் மாலா ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டி இருந்தது.
இந்நிலையில் சசிகலா எட்டு வாக்குகள் பெற்று பேராயூரணி ஒன்றியத் தலைவராக வெற்றிபெற்றார். மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த மறைமுகத் தேர்தல் எந்தவித பிரச்னையும் இல்லாமல் அமைதியாக நடைபெற்றது.
இதையும் படிங்க:5 துறைகளின் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு!