தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரயில்வே நிலையத்தில் கரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் வி.செளந்தர்ராஜன் தலைமை வகித்தார்.
முகாமில் பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழியன், மருத்துவர் வெங்கடேஷ், காவல்துறை உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு, தலைமை காவலர் சக்திவேல், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், புண்ணியநாதன், பூவலிங்கம், ராம்குமார், மருந்தாளுநர் சசிகலா, செவிலியர்கள் ராஜேஸ்வரி, லில்லிமேரி, மீனாள், ஜெனிபர் ஜான்சிராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வக நுட்பநர் குமரேசன் தலைமையிலான குழுவினர் பரிசோதனைக்கு வந்தவர்களிடம் சளி மாதிரியை எடுத்தனர்.
இதையும் படிங்க: கிருஷ்ணகிரியில் குழந்தைகளுக்கான வைட்டமின் - ஏ முகாம்!