ETV Bharat / state

சித்தாதிக்காடு தரைப்பாலத்தை சரிசெய்ய மக்கள் கோரிக்கை!

author img

By

Published : May 2, 2019, 8:28 PM IST

தஞ்சாவூர்: பேராவூரணி அருகே சித்தாதிக்காடு கிராமத்தில் மிகவும் மோசமான நிலையில் உள்ள தரைப்பாலத்தை மறுசீரமைப்பு செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சித்தாதி காடு தரைப்பாலம்

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள சித்தாதிக்காடு கிராமத்தில் உள்ள தரைப்பாலம் மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. காரணம், இந்தப் பாலத்தின் அருகில் உள்ள ரயில்வே பாலம் 40 அடி உயரத்திற்கு மேல் இருப்பதால் இந்த தரைப்பாலம் மிகவும் தாழ்ந்து படுமோசமான பள்ளத்தில் இருக்கிறது. மேலும், தொடர் மழை காலங்களில் 40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் மழை நீர், சித்தாதிக்காடு பாலத்திற்கு மேல் ஆறு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்லும் நிலை ஏற்படுகிறது.

சித்தாதிக்காடு தரைப்பாலம்

இதனால், பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் செல்லக்கூடிய போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. அதோடு இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரும் இந்த பாலத்தை கடந்து செல்ல கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் தூரம் சுற்றி வர வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. எனவே, சித்தாதிக்காடு கிராமத்தில் இருக்கும் தரைப்பாலத்தை உயரமாகக் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Intro:தரை பாலத்தால் அடிக்கடி போக்குவரத்து துண்டிப்பு


Body:தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகில் உள்ள சித்தாதி காடு தரைப்பாலம் மிகவும் தாழ்ந்து தொங்கு பாலமாக உள்ளதால் மழை காலங்களில் அடிக்கடி போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது. காரணம் இந்தப் பாலத்தின் அருகிலேயே உள்ள ரயில்வே பாலம் இந்த 40 அடி உயரத்திற்கு மேல் உள்ள நிலையில் இந்த தரைப் பாலம் மிகவும் தாழ்ந்து படு பள்ளமாக இருக்கிறது எனவே இந்த சித்தாதி காட்டு பாலத்தில் கிட்டத்தட்ட 40 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து வரும் மழைத்தண்ணீர் இந்த காட்டாற்று வழியாகத்தான் இந்த பாலத்தை கடக்க வேண்டியுள்ளது இந்நிலையில் மழை காலங்களில் அதாவது தொடர் மழையின் போது அதிக அளவில் இந்த காட்டாற்றில் தண்ணீர் வரும் பொழுது இந்த பாலத்திற்கு மேல் கிட்டத்தட்ட ஐந்து ஆறு அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது இதனால் பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி பட்டுக்கோட்டை ஆகிய வழித்தடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்படுகிறது மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோரும் பாதசாரிகளும் இந்த பாலத்தை கடக்க வேண்டும் என்றால் கிட்டத்தட்ட ஏழு கிலோமீட்டர் சுற்றி வர வேண்டியுள்ளது இதனால் நேரம் வீணாவதோடு பெட்ரோல் செலவும் வீணாகி விடுகிறது என்று இப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர் இது தவிர இந்த பாலத்தில் அதிக அளவில் தண்ணீர் செல்லும் போது இந்த பாலத்தை கடக்க முயன்ற பலர் அதாவது சைக்கிளில் செல்வோர் இந்த தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் நடந்தேறி உள்ளது எனவே இந்த பிரதான சாலையை உடனடியாக சீரமைக்கும் நோக்கோடு இந்த தரைப்பாலத்தை உயரமாக கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் அறந்தாங்கி பேராவூரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து பகுதி மக்களும் கோரிக்கை வைக்கின்றனர்


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.