ETV Bharat / state

வீணாகக் கடலில் கலக்கும் ஆற்றுநீர்; பொதுமக்கள் வேதனை!

author img

By

Published : Sep 23, 2019, 7:41 AM IST

தஞ்சாவூர் : கருங்குளம் கிராமத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கும் நிலையில், காட்டாற்றிலிருந்து வரும் தண்ணீர் முழுவதும் வீணாகக் கடலுக்குச் சென்று கலப்பதால் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

வீணாக கடலில் கலக்கும் ஆற்று நீர்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கருங்குளம் கிராமத்தில் ஆயிரத்து 500 குடும்பங்களுக்கும் மேல் வசித்துவருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் மிகப்பெரிய குளம் உள்ளது. 33 ஏக்கர் நிலப்பரப்பிலிருந்த இந்தக் குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது 10 ஏக்கர் அளவில் குறுகிவிட்டது.

தூர்வாரப்படாமல் புல் தரையாகக் காட்சியளிக்கும் குளம்

மேலும், நீண்டகாலமாக தூர்வாரப்படாமல் புல் தரையாகக் காட்சி அளிக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகாலமாக இந்தக் குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணியில் பொதுப்பணித் துறையோ அல்லது அரசு பிரதிநிதிகளோ முயற்சிக்கவில்லை என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கருங்குளம் கிராமம், கடல் பகுதியை ஒட்டி உள்ளதால் ஆழ்குழாய்க் கிணறுகளில் வரும் தண்ணீர் உப்புத் தண்ணீராக மாறிவிட்டது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் கருங்குளம் கிராமத்தை ஒட்டிச் செல்கின்ற நசுவினி ஆற்றில் வரும் மழை தண்ணீர் முழுவதும் வீணாகக் கடலுக்குச் சென்று கலக்கிறது.

எனவே, தண்ணீரை இந்தக் குளத்திற்கு கொண்டுவந்து நிரப்ப வேண்டும் என பலமுறை அலுவலர்களிடத்தில் கோரிக்கை வைத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதையும் படிங்க : விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கிற தமிழ்நாடு அரசு! - வாய்க்காலில் கலக்கும் கழிவுநீர்

Intro:கடலுக்கு சென்று வீணாகக் கலக்கும் காட்டாற்று நீரை குடிநீர் தேவைக்காக குளத்தில் நிரப்ப வேண்டும் கிராம மக்கள் கோரிக்கை


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கருங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் 1500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் மையப்பகுதியில் கருங்குளம் என்ற மிகப்பெரிய குளம் உள்ளது. 33 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த இந்த குளம் நாளடைவில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு தற்போது 10 ஏக்கர் அளவில் குறுகி விட்டது .மேலும் நீண்டகாலமாக தூர்வார படாமல் புல் தரையாக காட்சி அளிக்கிறது. கடந்த 6 வருட காலமாக இந்த குளத்தில்தண்ணீர் நிரப்பும் பணியில் பொதுப்பணித்துறை யோ அல்லது அரசு பிரதிநிதிகளோ முயற்சிக்கவில்லை என்று குற்றச்சாட்டு இப்பகுதி மக்களிடம் இருந்து வருகிறது. கருங்குளம் கிராமம் கடல் பகுதியை ஒட்டி உள்ளதால் இங்கு உள்ள நிலத்தடி நீர் உப்பு நீராக மாறி ஆழ்குழாய்க் கிணறுகளில் வரும் தண்ணீரும் உப்புத் தண்ணீராக மாறி விட்டது. தற்போது கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் கருங்குளம் கிராமத்தை ஒட்டி செல்கின்ற நசுவினி ஆற்றில் வரும் மழை வெள்ளத்தை இந்த குளத்திற்கு கொண்டு வந்து குளத்தை நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை பல முறை அதிகாரிகளிடத்தில் வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த காட்டாற்றில் இருந்து வரும் தண்ணீர் முழுதும் வீணாக கடலுக்கு சென்று கலக்கிறது. இந்தநிலையில் பொதுமக்கள் அதாவது கருங்குளம் மக்கள் இந்த குளத்தில் தண்ணீர் நிரம்பினால் ஆடு மாடு குடிக்கவும் இப்பகுதியில் உள்ள 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் முழுமையான விவசாயம் செய்யவும் மேலும் குடிநீர் தேவைக்கும் பயன்படுத்த முடியும் என்ற நிலை உள்ளது. இருந்தும் இதை செய்வதற்கு அரசு முன்வரவில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.