ETV Bharat / state

நியாய விலைக் கடையில் அத்தியாவசிய பொருட்கள் வழங்க முன்னோட்டம்!

author img

By

Published : Mar 31, 2020, 11:43 PM IST

தஞ்சாவூர்: பேராவூரணி நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசின் கரோனா அத்தியாவசிய பொருட்களின் சிறப்புத் தொகுப்பு முன்னோட்டம் நடைபெற்றது.

thanjavur people
thanjavur people

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், பழைய பேராவூரணி நியாய விலைக் கடையில் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கரோனா அத்தியாவசிய பொருட்களின் சிறப்புத் தொகுப்பு வழங்குதல் நிகழ்ச்சியின் முன்னோட்டம் நடைபெற்றது. இதில், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலட்சுமி தலைமை வகித்தார்.

துணை ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், கரோனா அத்தியாவசிய பொருட்களின் சிறப்புத் தொகுப்பை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் அங்காடி விற்பனையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேராவூரணியில் மக்களுக்கு வழங்கப்பட்ட உணவு பொருட்கள்

இந்த சிறப்பு தொகுப்பில் குடும்ப அட்டைக்கு 20 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ பருப்பு, 1 லிட்டர் பாமாயில் உள்பட ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவை வழங்கப்பட்டன. ஊர் மக்கள் சமூக இடைவெளி விட்டு பொறுமையாக வாங்கிச் சென்றனர்.

இதையும் படிங்க: 'களைக்கட்டட்டும் வீடு கற்பனைத் திறத்தோடு' - மதுரை எம்பியின் ஏற்பாட்டில் கலை இலக்கியப் போட்டிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.