ETV Bharat / state

கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர்: காவல் துறையினர் மரியாதையுடன் தகனம்!

author img

By

Published : Aug 23, 2020, 5:11 PM IST

தஞ்சாவூர்: கரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்த காவல் ஆய்வாளரின் உடல், காவல் துறையினர் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர்: காவல் துறையினர் மரியாதையுடன் தகனம்!
Police inspector dead by corona

தஞ்சாவூர் மாவட்டம் தோகூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றிவந்தவர் கருணாகரன். இவர் கடந்த வாரம் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

உடல்நிலை மிகவும் மோசமான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் காவல் துறை மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

தஞ்சை மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாக காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.