தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்த நெல்லியடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முல்லை சந்திரசேகர். இவர் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பேராவூரணி காவல் உதவி ஆய்வாளர் அருள் குமார் தலைமையிலான காவல் துறையினர், ஊர் காவல்படையினர் இணைந்து கள்ளச்சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த செல்வம் ,ராஜசேகர், ராஜவேல், நீலகண்டன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து சாராயம் காய்ச்சுவதற்கு தேவையான 50 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு: தொடரும் கள்ளச்சாராய கலாசாரம்!