ETV Bharat / state

'உங்களிடம் காவலன் செயலி உள்ளதா?' - விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவலர்கள்

author img

By

Published : Jan 22, 2020, 9:13 AM IST

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மொபைல் கடையில் புதிதாக மொபைல் வாங்க வந்த பெண்களுக்கு காவலன் செயலி குறித்து காவல் துறையினர் விளக்கமளித்தனர்.

kavalan sos app
kavalan sos app

நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துவரும் நிலையில், நாடு முழுவதும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அவசர நேரங்களில் பெண்கள், முதியவர்கள் ஆகியோர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாகத் தமிழ்நாடு காவல் துறை 'காவலன் SOS' என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

'காவலன் SOS' பயன் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, விளம்பரப் பதாகைகளும் ஆங்காங்கே வைக்கப்படுகின்றன. அதனோடு, இச்செயலியை தரவிறக்கம் செய்வதன் மூலம், ஆபத்தில் இருக்கும் பெண்ணிற்கு அடுத்த சில நிமிடங்களிலேயே காவல் துறையின் பாதுகாப்பு கிடைத்துவிடும். முக்கியமாக தனியாகப் பயணிக்கும் அனைத்துப் பெண்களுமே காவலன் செயலியை தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது எனக் காவல் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் காவல் துறையினர்

இந்நிலையில், தனியார் மொபைல் கடைக்குப் புதிதாக மொபைல் வாங்க வந்த பெண்களுக்கு காவலன் செயலியை பதிவிறக்கம் செய்துகொடுத்து, அச்செயலியை எவ்வாறு பயன்படுத்துவது குறித்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கன்னிகா, உதவி ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் விளக்கினர்.

இதையும் படிங்க : பெரியாருக்கு எதிரான ரஜினியின் போர் வெல்லுமா?

Intro:காவலன் செயலியை உபயோகப்படுத்த விழிப்புணர்வு


Body:தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் மொபைல் கடையில் புதிதாக மொபைல் வாங்க வரும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு காவலன் செயலியின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் தனியார் மொபைல் கடையில் புதிதாக மொபைல் வாங்க வரும் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு sos app எனப்படும் காவலன் செயலியை பதிவிறக்கம் செய்து அந்த செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய விளக்கங்களை மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கன்னிகா மற்றும் உதவி ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் பெண்களுக்கு விளக்கினர். மேலும் இந்த காவலன் செயலியை பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிதாக மொபைல் வாங்குபவர்களுக்கு காவலன் செயலியை அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வரும் தனியார் மொபைல் கடை உரிமையாளர் களையும் காவல்துறையினர் பாராட்டினர். இந்த புதிய முயற்சியை தாங்கள் வரவேற்பதாகவும் இந்த செயலியை மற்ற பெண்களுக்கு விளக்கி இதன்மூலம் ஆபத்து காலங்களில் தங்களை காத்துக் கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமையும் என்கின்றனர் பெண்கள்.


Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.