ETV Bharat / state

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா!

author img

By

Published : Dec 6, 2019, 6:17 PM IST

தஞ்சாவூர்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயில் கார்த்திகை கடை ஞாயிறை முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது

Festival in Kumbakonam
Festival in Kumbakonam

சூரியன், சந்திரன், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் வழிபட்ட திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் ராகுபகவான் நாகவல்லி, நாக கன்னி என இரு துணைவியாருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி இன்று காலை கொடியேற்றத்துடன் விழா விமரிசையாகத் தொடங்கியது. முன்னதாக கொடிக் கம்பத்திற்கு பால், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் அபிஷேகமும், இதனைத் தொடர்ந்து நந்தி உருவம் பொறித்த திருக்கொடியினையும் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.

கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா

இதனைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி திருவீதி உலாவும் வரும் 14ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டமும் 15ஆம் தேதி பத்தாம் நாள் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும், பின்னர் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதையும் படிங்க:

உலகத்தரச் சான்று பெற்ற அரசு மருத்துவமனை - மருத்துவருக்கு குவியும் விருதுகள்!

Intro:தஞ்சாவூர் டிச 06


திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவில் கார்த்திகை கடை ஞாயிறு முன்னிட்டு இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியதுBody:
தஞ்சாவூர் மாவட்டம்
கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோவிலில் சூரியன் சந்திரன் ராகு ஆகிய மூன்று கிரகங்கள் வழிபட்ட இத்திருத்தலத்தில் நவ கோள் தலங்களில் முதன்மை வாய்ந்த ராகுபகவான் நாகவல்லி நாககன்னி என இரு துணைவியாருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார் இத்தகு சிறப்பு வாய்ந்த நவகிரக ஸ்தலங்களில் முதன்மை வாய்ந்த ஸ்ரீ ராகுபகவானின் ஸ்தலமாகவும் விளங்கி வருகின்றது
சிறப்பு வாய்ந்த இத் திருக்கோயிலில் கடை ஞாயிறு பெருவிழாவையொட்டி இன்று காலை கொடியேற்றத்துடன் விமர்சையாக தொடங்கியது முன்னதாக கொடி கம்பத்திற்கு பால் சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் அடிஷேகமும் இதனை தொடர்ந்து நந்தி உருவம் பொறித்த திருக்கொடியினையும் சிவாச்சாரியார்கள் கொடியை ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்
இதனை தொடர்ந்து தினமும் காலையும் மாலையும் சுவாமி திருவீதி உலாவும் வரும் 14ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருத்தேரோட்டமும் 15ம் தேதி பத்தாம் நாள் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளின் திருவீதியுலாவும் பின்னர் சூரிய புஷ்கரணியில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகின்றதுConclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.