ETV Bharat / state

கிராம ஊராட்சி தலைவர்கள் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்பு

author img

By

Published : May 3, 2020, 5:02 PM IST

தஞ்சை: ஐந்து கிராம ஊராட்சி தலைவர்கள், காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்.

கிராம ஊராட்சி தலைவர்கள்  காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்
கிராம ஊராட்சி தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலுள்ள அலிவலம், பாலத்தளி, குறிச்சி, பூவாளூர் மற்றும் காயாவூர் ஆகிய ஐந்து ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள ஐந்து கிராம மக்களும் ஒன்று சேர்ந்து ஒற்றுமையுடன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐந்து கிராமங்களின் மையப் பகுதியான சீதாம்பாள்புரம் கடைத்தெருவில் மிகப்பெரிய கரோனா ஓவியம் வரைந்து அந்த ஓவியத்தை சுற்றிலும் நின்று காவல்துறை துணை ஆய்வாளர்கள் மோகன்ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோர் முன்னிலையில் காயாவூர் ஊராட்சி மன்ற தலைவர் பாலு தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் அலுவலர்கள், தன்னார்வலர்கள் கரோனாவுக்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

கிராம ஊராட்சி தலைவர்கள் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் கரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்றனர்

இந்த ஐந்து கிராமங்கள் ஒற்றுமையுடன் ஒன்று சேர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது இதன் சுற்றுவட்டார பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: வீடு தேடி சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஊராட்சித் தலைவர்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.