ETV Bharat / state

பைக் மீது அரசு பேருந்து மோதி விபத்து - இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு

author img

By

Published : Nov 30, 2020, 9:22 PM IST

தென்காசி: இடைக்கால் அருகே இருசக்கர் வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Government bus collides with bike - Two youths killed
Government bus collides with bike - Two youths killed

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணா புரத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன் (18), அவரது நண்பர் மாரியப்பன் (18). இவர்கள் இருவரும் இன்று மாலை கிருஷ்ணாபுரத்தில் இருந்து தென்காசிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது இடைகால் அருகே உள்ள துரைச்சாமிபுரம் பகுதியில் வரும்போது செங்கோட்டையில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து வந்த இலத்தூர் காவல்துறையினர், இருவரின் உடலையும் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: செல்ஃபோன் பறித்துச் சென்றவரை துரத்திப் பிடித்து, குத்திக் கொன்ற இளைஞர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.