ETV Bharat / state

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!

author img

By

Published : Feb 12, 2021, 2:02 PM IST

தென்காசி: சங்கரன்கோவில் அருகே விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையை மீட்ட காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை
அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் ரகு. இவருக்குச் சொந்தமாக விவசாய கிணற்றில் பிறந்த சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று அழுகிய நிலையில் கிடந்துள்ளது.

இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் சின்னகோவிலான் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த பச்சிளம் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதேபோன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னர் ரயில்வே பீடர் சாலையிலுள்ள தியேட்டர் வளாகத்தில் பச்சிளம் குழந்தையைத் தீவைத்து எரித்த சம்பவம் அரங்கேறியது.

அதேபோல சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தையை உயிருடன் விட்டுச்சென்ற சம்பவம் நடந்துள்ளது. சங்கரன்கோவில் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்றுவருவதால் காவல் துறையினர் இது குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பிரசவ வலியால் துடித்த பெண்: ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.