ETV Bharat / state

காதல் மனைவி கடத்தல் விவகாரம் - நீதிபதியின் உத்தரவின்பேரில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளம்பெண்!

author img

By

Published : Feb 8, 2023, 4:56 PM IST

தென்காசியில் காதல் மனைவி கடத்தப்பட்ட விவகாரத்தில் நீதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இளம்பெண்ணை போலீசார் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காதல் மனைவி விவகாரம் - நீதிபதியின் உத்தரவின்பேரில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளம்பெண்!
காதல் மனைவி விவகாரம் - நீதிபதியின் உத்தரவின்பேரில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளம்பெண்!

காதல் மனைவி கடத்தல் விவகாரம் - நீதிபதியின் உத்தரவின்பேரில் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட இளம்பெண்!

தென்காசி: இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த வினித் - கிருத்திகா காதல் தம்பதியினரை பிரித்து, கிருத்திகா கடத்தப்பட்டதாக கூறப்படும் சூழலில், இந்தச் சம்பவம் குறித்து குற்றாலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கிருத்திகா தான் கடத்தப்படவில்லை எனவும், தான் அழைத்தன் பேரில் தான் தனது பெற்றோர்கள் தன்னை வந்து அழைத்துச் சென்றதாகவும் பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். இந்த நிலையில், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வினித், கிருத்திகாவை மீட்டு தரக்கோரி ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அந்த மனு கடந்த சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்த சூழலில், வழக்குத் தொடர்பாக குற்றால காவல் நிலைய ஆய்வாளர் ஆஜராகி வழக்கின் தன்மை குறித்து எடுத்துக்கூறினார். அதனைத்தொடர்ந்து, வழக்கு விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில், கிருத்திகா நேற்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அவரது வழக்கறிஞர்கள் மூலம் ஆஜர் படுத்தப்பட்டார்.

அப்பொழுது, அவரிடம் நீதிபதிகள் விசாரணை நடத்திய போது, முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளிக்கவே கிருத்திகா மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறி அவரை 2 நாட்கள் காப்பகத்தில் வைத்து மனநல ஆலோசனை வழங்கி அதன் பின்னர், அவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெற வேண்டுமென நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

அதன் அடிப்படையில், கிருத்திகாவை குற்றாலம் போலீசார் அழைத்து வந்து தமிழ்நாடு அரசு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சகி ஒன் ஸ்டாப் சென்டர் மகளிர் ஹோமில் ஒப்படைத்தனர்.

அங்கு, கிருத்திகாவுக்கு தகுந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹோமில் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டு வெளிநபர்கள் யாரும் உள்ளே வராத வண்ணம் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் 100% விடுபடலாம்: திருச்சி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.