ETV Bharat / state

'கீழடியை உலகெங்கும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது'

author img

By

Published : Mar 16, 2020, 10:11 AM IST

Updated : Mar 16, 2020, 10:43 AM IST

சிவகங்கை: டிஜிட்டல் முறையைப் பயன்படுத்ததி கீழடியை உலகெங்கும் காட்சிப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் பாண்டியராஜன் கீழடி ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட பின்பு தெரிவித்தார்.

கீழடி ஆறாம் கட்ட அகழாய்வு  மாபா பாண்டியராஜன்  கீழடி முதுமக்கள் தாழிகள்  keeladi mafoi pandiyarajan  keeladi excavation
கீழடியை உலகெங்கும் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது

சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரால் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடியில் மட்டும் நடைபெற்ற நிலையில், ஆறாம் கட்ட அகழாய்வின் தொடர்ச்சியை பைந்தமிழர்களின் வாழ்வியல், பண்பாடு, கலாசாரம், நம்பிக்கை சார்ந்த வரலாற்றை அறியும் வகையில் கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய நான்கு பகுதிகளில் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.

இது தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பணிகளைத் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், " சென்ற முறை பார்த்த சுவர் மிக முக்கியமான கண்டுபிடிப்பாக இருந்தது.

ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை பார்வையிட்ட அமைச்சர் பாண்டியராஜன்

அதில், அலுமினியம் அடங்கிய செங்கல் இருந்தது. முதுமக்கள் தாழிகள் இந்த முறை கிடைக்கப்பெற்றுள்ளது. தொழில் நாகரிகமாக நாம் அதைப் பார்த்தோம். இந்த முறை நாம் எடுத்திருக்கும் ஒரு பகுதி முழுமையாக குடியிருப்புப் பகுதியாக இருக்கிறது. மற்றொரு இடம் இடுகாடு பகுதியாக இருக்கும் என கண்டறிந்துள்ளனர்.

12 கோடி மதிப்பில் கீழடியில் அருங்காட்சியகம்- மாபா. பாண்டியராஜன்

ஆறு மாதம் நடைபெறவுள்ள இந்த அகழாய்வில் 150 பேர் வேலை செய்து வருகின்றனர். தொல்லியல் நிபுணர்கள் தேர்வு செய்வதற்கான, தேர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் 12 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் விடப்பட்டு மிக விரைவில் தொடங்கப்பட உள்ளன.

மேலும், இப்பணிகள் 10 மாதங்களில் முடிவடையும். மொத்தமாக 15 ஆயிரம் அரும்பொருட்கள் அருங்காட்சியகத்தில் வைக்கப்படவுள்ளன. கீழடியை உலகெங்கும் காட்சிப்படுத்துவதற்கு டிஜிட்டல் முறைப்படி காட்சிப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகின்றன" என்றார்.

இதையும் படிங்க: இந்த வருமானத்தை எப்படி செலவழிப்பது? - விடை சொல்லும் கல்வெட்டுகள்

Last Updated : Mar 16, 2020, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.