ETV Bharat / state

சிவகங்கையில் சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு..!

author img

By

Published : Nov 11, 2022, 8:58 AM IST

Updated : Nov 11, 2022, 1:00 PM IST

சிவகங்கை மாவட்ட சத்துணவு திட்ட பிரிவில், திருப்பத்தூர்‌, எஸ்‌.புதூர்‌, சாக்கோட்டை மற்றும்‌ கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில்‌ காலியாக உள்ள Computer Operator காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு
சத்துணவு திட்ட பிரிவில் வேலைவாய்ப்பு

காலிப்பணியிடங்கள் :

Computer Operator - 4

இது பகுதி நேர அடிப்படையில்‌ தற்காலிகமான பணி ஆகும்‌. இப்பணியிடம்‌ ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.10.2022 தேதியின் படி சூறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்‌. பொது வகுப்பினருக்கான அதிகபட்ச வயது 30. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ மற்றும்‌ சீர்மரபினர்‌, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்‌ ஆகியோருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32. ஆதி திராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 35. இதர வகுப்பைச்சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில்‌ M.S. Office அனுபவம்‌ பெற்றவராக இருத்தல்‌ வேண்டும்‌. முதல்நிலை தட்டச்சு ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழ்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் கணினித்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாத சம்பளமாக ரூ.12,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-172 என்ற அதிகாரப்பூர்வ இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 15.11.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: கேந்திரிய வித்யாலயா வேலைவாய்ப்பு!

Last Updated : Nov 11, 2022, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.