ETV Bharat / state

சிவகங்கையில் இலவச உணவு வழங்கும் திட்டம்: தொடங்கிவைத்த அதிமுக எம்எல்ஏ!

author img

By

Published : Jun 4, 2021, 4:49 PM IST

சிவகங்கை: மாவட்ட அரசு மருத்துவமனையில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தொடங்கிவைத்தார்.

சிவகங்கையில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பி.ஆர்.செந்தில்நாதன்
சிவகங்கையில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பி.ஆர்.செந்தில்நாதன்

கரோனா பரவல் இரண்டாவது அலை காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் கடைகள் ஏதும் திறக்கப்படவில்லை.

இதனால், மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகள், உள் நோயாளிகளை கவனித்துவருபவர்கள் என பலருக்கு உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர், இயக்கங்கள் தங்களால் ஆன உதவிகளை செய்துவருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பி.ஆர். செந்தில்நாதன் தனது சொந்த நிதியிலிருந்து ஊரடங்கு காலம் முடியும்வரை நாள்தோறும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உணவு தேவைப்படுவோருக்கு இலவசமாக வழங்கும் திட்டத்தினை மருத்துவமனை வளாகத்தில் தொடங்கிவைத்தார்.

சிவகங்கையில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பி.ஆர்.செந்தில்நாதன்
சிவகங்கையில் இலவசமாக உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் பி.ஆர்.செந்தில்நாதன்

இதில் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டனர். உணவு தேவைப்படும் நோயாளிகள், அவர்களைக் கவனித்துக்கொள்பவர்கள் உணவுப் பொட்டலங்கள் வாங்கிச் சென்றனர்.

இந்தத் திட்டத்தைத் தொடங்கிவைத்த பி.ஆர். செந்தில்நாதனை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.