தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டிலுள்ள பட்டியல் சாதிப் பிரிவிலுள்ள குடும்பர், காலாடி, பண்ணாடி, கடையர், பள்ளர், வாதிரியார், தேவேந்திர குலத்தார் ஆகிய ஏழு உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர் என சான்றிதழ் அளிக்கவும் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைப் பட்டியல் சாதிப் பிரிவிலிருந்து நீக்கி வேளாண் மரபினர் என்ற புதிய பிரிவில் கொண்டுவந்து, அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மக்கள் தொகை அடிப்படையில் வழங்க வேண்டும். இது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 150க்கும் மேற்பட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், தேவேந்திர குல வேளாளர் என்று மாற்றி அரசாணை வெளியிடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவர்கள் மனு அளித்தனர். மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினரும் கறுப்புச் சட்டை அணிந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: முல்லை பெரியாற்றில் தண்ணீர் திறக்க வேண்டி விவசாயிகள் போராட்டம்!