ETV Bharat / state

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்குத் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆதரவு!

author img

By

Published : Dec 4, 2020, 2:00 PM IST

சேலம்: மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் முழு மனதோடு ஆதரிக்கிறது என அதன் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிவபெருமாள் தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்திவருவதற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சிவபெருமாள் கூறுகையில், "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டம் தனிநபர் உரிமைகளுக்கு எதிரானது.

விவசாயத்தில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக அரசை அல்லது நீதிமன்றத்தை விவசாயிகள் நாடக்கூடாது என்று அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே விவசாயிகளுக்கு எதிரான புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளை தமிழ்நாடு விவசாயிகள் முழு மனதோடு ஆதரிக்கிறோம்.

புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்குப் பாதிப்பில்லை என்று முதலமைச்சர் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இந்தச் சட்டத்தால் இந்திய விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதே உண்மை.

விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

எனவே பாதிப்பு தரும் வேளாண் சட்டத்தை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். அதே நேரத்தில் விவசாய சங்கங்களின் சார்பில் சென்னையிலும் தொடர் போராட்டங்களை நடத்த உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: டெல்லியில் போராடும்‌ விவசாயிகள் - குரல் கொடுத்த நடிகர் கார்த்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.