ETV Bharat / state

'நிவேதா தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை' - முருகன்

author img

By

Published : Jan 22, 2020, 7:34 PM IST

சேலம்: பெரியார் பல்கலை மாணவி நிவேதா தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

periyar-university
periyar-university

இரண்டு வாரங்களுக்கு முன்பு சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தாவிரவியல் துறை மாணவி நிவேதா பல்கலை மகளிர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் மர்மம் இருப்பதாகவும், பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையும் அதனை காதல் தோல்வியால் தற்கொலை செய்ததாகக் கூறி திசைதிருப்புவதாகவும் பேசப்பட்டது.

இதனால் மாணவியின் தற்கொலையில் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரியார் பல்கலைக்கழக மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன்

அதில் கலந்துகொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியர் திறன் மேம்பாடு பெற்று பொருளாதார உயர்வு எட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் மாணவி தற்கொலை குறித்து கேள்வி எழுப்பியதற்கு, மாணவி தற்கொலை தொடர்பாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி நிவேதாவின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பேன் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீது பாலியல் புகார்!

Intro:பெரியார் பல்கலை மாணவி நிவேதா தற்கொலை சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.


Body:சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு தாவிரவியல் துறையைச் சேர்ந்த மாணவி நிவேதா பல்கலைக்கழக மகளிர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் மாணவியின் தற்கொலையில் உள்ள மர்மத்தை கண்டுபிடித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெரியார் பல்கலைக்கழக மாணவர்களும் சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்களும் வலியுறுத்தி வந்தனர் .

ஆனால் அவரின் தற்கொலை காதல் தோல்வியால் நடைபெற்றது என்று கூறி பல்கலைக்கழக நிர்வாகமும் காவல்துறையினரும் தற்கொலை சம்பவத்தை மூடி மறைத்து விட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று பெரியார் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் எல். முருகன் தொடங்கி வைத்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் ," கிராமப்புற தாழ்த்தப்பட்ட மாணவ மாணவியர் திறன் மேம்பாடு பெற்று பொருளாதார உயர்வு எட்டும் வகையில் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து முருகனிடம் செய்தியாளர்கள் பெரியார் பல்கலைக்கழக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினர் . அப்போது பதிலளித்த முருகன், " மாணவி தற்கொலை தொடர்பாக எனக்கு எந்த புகாரும் வரவில்லை .தற்போது தான் கேள்விப்படுகிறேன் .

ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த மாணவி நிவேதாவின் தற்கொலை குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பேன்" என்று தெரிவித்தார்.


Conclusion:பேட்டியின்போது பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் . குழந்தைவேல் உள்ளிட்ட ஏராளமான பேராசிரியர்கள் மாணவ மாணவியர் உடனிருந்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.