சேலம்: ஆத்தூர் அருகே வடகரையை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் சுபாஷ் சந்திரபோஸ் (19). இவர் கடந்த 2018-19 ஆம் ஆண்டு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து முடித்து உள்ளார்.
கடந்த ஆண்டு 158 மதிப்பெண் பெற்ற நிலையில் இந்த ஆண்டு 261 மதிப்பெண் பெற்றார். நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவராக வேண்டும் என்ற கனவில் இருந்த மாணவர் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனால் மனம் உடைந்த சுபாஷ் சந்திரபோஸ் கடந்த 1-ம் தேதியன்று விஷம் குடித்து உயிருக்கு போராடிய படி வீட்டில் கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் மாணவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று (நவ.6) பரிதாபமாக உயிரிழந்தார்.
2 ஏக்கர் நிலத்தை விற்று மகனை படிக்க வைத்ததாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனையில் தீ விபத்து - 11 கரோனா நோயாளிகள் உயிரிழந்த சோகம்!