ETV Bharat / state

ஏற்காட்டில் மண் சரிவு..! ஆட்சியர் ஆய்வு...

author img

By

Published : May 15, 2022, 3:11 PM IST

ஏற்காட்டில் நேற்று (மே14) ஏற்பட்ட மண் சரிவு சரி செய்யப்பட்டதால், இன்று (மே 15) முதல் வழக்கம்போல போக்குவரத்து அனுமதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

yercaud Landslide  salem collector inspection  salem collector inspection on yercaud Landslide area  salem collector  ஏற்காட்டில் மண் சரிவு  சேலம் மாவட்ட ஆட்சியர்  ஏற்காடு மண் சரிவு
ஏற்காட்டில் மண் சரிவு

சேலம்: ஏற்காட்டில் நேற்று (மே14) இரவு பெய்த இடைவிடாத தொடர் கனமழையின் காரணமாக, ஏற்காடு மலைப்பாதையில் உள்ள 40 அடி பாலம் அருகே இரவு 8 மணியளவில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இந்த மண்சரிவு 10க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பட்டதால் நேற்றிரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று (மே15) காலை மண்சரிவு ஏற்பட்ட இடத்திற்கு, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, “நேற்றிரவு ஏற்பட்ட மண்சரிவு தீயணைப்பு துறையினர் நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மூலம் மண்சரிவு சரி செய்யப்பட்டுள்ளது. அதனால் இன்று காலை முதல் வழக்கம்போல போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் ஆய்வு...

இருந்தபோதிலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். மேலும் இரவு நேரங்களில் மழை பெய்கின்ற பொழுது வாகனத்தில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் எச்சரிக்கையாக வாகனத்தை இயக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து பேசிய அவர், திட்டமிட்டபடி 26ஆம் தேதி கோடை விழா நடைபெறும் எனவும், சுற்றுலா பயணிகளுக்கு எந்த ஒரு அச்சமும் வேண்டாம் என்றும் கூறினார். பின்னர் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நெல்லை கல்குவாரி விபத்து: 4 பேரை மீட்பதில் கடும் சவால்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.