ETV Bharat / state

துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதியத்தில் கையாடல் செய்தவர் கைது!

author img

By

Published : Sep 15, 2019, 8:04 PM IST

சேலம்: மாநகராட்சிக்கு உட்பட்ட கொண்டாலம்பட்டி மண்டலத்தில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்களுக்கு வழங்கப்படும் பண பலன்களில் ரூ. 88 லட்சம் வரை கையாடல் செய்த துப்புரவுத் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.

துப்புரவு தொழிலாளி

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி , கொண்டலாம்பட்டி , சூரமங்கலம் ஆகிய பகுதிகளை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அங்கு பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு அந்தந்த மண்டலங்களிலேயே அனைத்து வித பண பலன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி கொண்டாலம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 100க்கும் மேற்பட்ட துப்புரவுத் தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பலன்கள் காசோலைகள் மூலமாக வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக மாநகராட்சி ஆணையர் சதீசுக்கு புகார் வந்தது. புகாரின் பேரில் மோசடி குறித்து விசாரணை நடத்த கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ்பாபுவுக்கு ஆணையர் உத்தரவிட்டார்.

மாநகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் நடத்திய விசாரணையில் துப்புரவுத் தொழிலாளி வெங்கடேசன் என்பவர் ரூ.88 லட்சம் மோசடி செய்துள்ளது கண்டறியப்பட்டது. அவர் கடந்த எட்டு மாத காலமாக இந்த மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையர் ரமேஷ்பாபு அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:சேலம் மாநகராட்சி கொண்டாலம்பட்டி மண்டலத்தில் துப்பரவு பணியாளர்களுக்கு பண பலன்களை காசோலை மூலமாக வழங்குவதில் ரூபாய் 88 லட்சம் மோசடியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.Body:
சேலம் மாநகராட்சி கொண்டாலம்பட்டி மண்டலத்தில் துப்பரவு பணியாளர்களுக்கு பண பலன்களை காசோலை மூலமாக வழங்குவதில் ரூபாய் 88 லட்சம் மோசடியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மற்றும் அஸ்தம்பட்டி , கொண்டலாம்பட்டி , சூரமங்கலம் என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த மண்டலங்களுக்கு உட்பட்ட கோட்டங்களில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு அந்தந்த மண்டலங்களிலேயே அனைத்து வித பண பலன்களும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி சேலம் கொண்டாலம்பட்டி மண்டல அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு சேர வேண்டிய பல்வேறு பண பலன்களை காசோலைகள் மூலமாக வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாக சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீசுக்கு துப்புரவு பணியார்கள் சிலர் புகார் செய்தனர்.

குறிப்பாக துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை வழங்கியதில், அவர்கள் பெயரை பயன்படுத்தி கூடுதலாக பணம் எடுக்கப்பட்டு உள்ளதாகவும், கடந்த ஒரு ஆண்டுகளாக இது போன்று கூடுதலாக நிதி எடுத்ததன் மூலமாக ரூபாய் 88 லட்சம் வரை முறைகேடு நடந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் இந்த மோசடி குறித்து விசாரிக்க கொண்டலாம்பட்டி மண்டல உதவி ஆணையாளர் ரமேஷ்பாபுவுக்கு உத்தரவிட்டார் .


இதையடுத்து அவர் விசாரணை நடத்தியதில் துப்புரவு தொழிலாளி வெங்கடேசன்
ரூபாய் 88லட்சம் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

துப்புரவு பணியாளர்களின் சம்பள பணத்தில் கடந்த 8 மாத காலத்தில் சுமார் ரூபாய் 88 லட்சம் வரை வெங்கடேசன் மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து கொண்டலாம்பட்டி உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு ,
சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமாரிடம் துப்புரவு தொழிலாளி வெங்கடேசனிடம் விசரிக்க புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு குறித்து விசாரிக்க சேலம் மாநகர காவல் ஆணையாளர் செந்தில்குமார் ,
சேலம் மாநகர மத்திய, குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து காவல்துறையினர் விசாரித்து சனிக்கிழமை இரவு வெங்கடேசனை கைது செய்தனர் .

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.இந்த மோசடிக்கு வேறு யாரும் துணையாக உள்ளனரா என்றும் தற்போது விசாரணை நடக்கிறது.

இந்த நிலையில் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி வெங்கடேசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.