ETV Bharat / state

ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது

author img

By

Published : Apr 15, 2021, 10:29 PM IST

சேலம்: ஏற்காட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது
சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவர் கைது

சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள ஏற்காடு மலை கிராமப் பகுதிகளிலும், கல்வராயன் மலைப் பகுதிகளிலும் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின் பேரில் மாரமங்கலம், கேளையூர் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சுப்பிரமணி என்பவர் வீட்டிற்கு அருகில் கொட்டகை அமைத்து சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், விற்பனைக்காக வைத்திருந்த 20 லிட்டர் சாராயத்தைக் கைப்பற்றி அழித்தனர். மேலும் ஆறு பேரல்களில் இருந்த 6 ஆயிரம் லிட்டர் சாராயத்தைக் கீழே ஊற்றினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.