ETV Bharat / state

தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த கார் -ஓட்டம் பிடித்த பயணிகள்

author img

By

Published : Sep 8, 2019, 4:30 PM IST

சேலம் -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

car accident

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சேலத்திலிருந்து தருமபுரி நோக்கி சென்ற டாட்டா இண்டிகா கார் திடீரென தீப்பிடித்தது. அப்போது, அதில் பயணித்த கார் ஓட்டுநர் மற்றும் உறவினர்கள் கார் தீப்பற்றி எரிவதைக் கண்டதும் காரை நிறுத்திவிட்டு ஓடினர். இதனால் காரில் பயணித்தவர்கள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

பற்றி எரியும் கார் பயணிகள் அச்சம்

காரின் முன்பகுதியில் பற்றிய தீயானது மளமளவென பரவி கார் முழுவதும் தீயில எரிந்து சேதமடைந்தது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல் துறையினர் கார் எரிந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடிக் கொண்டிருந்த கார் திடீர் என்று தீ பற்றி எரிந்தது. காரில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.Body:

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த  தொப்பூர் பகுதியில் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் , சேலத்தில் இருந்து தர்மபுரி நோக்கி சென்ற டாட்டா இன்டிகா கார் ஒன்று இன்று திடீரென தீப்பிடித்தது.

அதில் பயணித்த கார் ஓட்டுனர் மற்றும் உறவினர்கள் கார் தீப்பற்றி எரிவதை கண்டவுடன் திடீரென காரை நிறுத்தி தப்பிச் சென்றதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

காரின் முன்பகுதியில் பற்றிய தீயானது மளமளவென கார் முழுவதும் பரவி கார் முழுவதும் தீயில எரிந்து கார் முழுவதும் சேதமானது.


இதனிடையே சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தொப்பூர் காவல்துறையினர் கார் எரிந்த சம்பவம்  குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் தீ பிடித்து எரிந்ததை அந்த வழியே சென்றவர்கள் அதிர்ச்சியோடு பார்த்து சென்றனர்.
Conclusion:
சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஓடிய கார் ஒன்று, திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.