ETV Bharat / state

மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் - போதை ஆசாமி கைது

author img

By

Published : Aug 20, 2022, 9:33 PM IST

மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி மிரட்டல் விடுத்த போதை ஆசாமியை காவல் துறையினர் கைது செய்தனர்.

Etv Bharat Etv Bharat வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது
Etv Bharat வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

சேலம்: சென்னையில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு (ஆக. 19) 10 மணிக்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் ஒருவர், மேட்டூர் அணையில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனையடுத்து எச்சரிக்கையான காவல் துறையினர், சேலம் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து நேற்றிரவு சேலத்தில் இருந்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மேட்டூர் சென்று, அணையின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தினர். எனினும், சோதனையில் வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில், சேலம் மாவட்டம் மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (57) என்பவர் கட்டுப்பாடு அறைக்கு தொடர்பு கொண்டதை கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து மேச்சேரி காவல் துறையினர் மகாலிங்கத்தை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், மது போதையில் இருந்த மகாலிங்கம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தனது செல்போன் மூலம் அழைப்பு விடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து மகாலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்து மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: சென்னையில் போலி நகை கொடுத்து மோசடி.. போலீசாரின் மனைவிக்கு வலைவீச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.