ETV Bharat / state

இரட்டை மடி மீன்பிடி முறையை தடை செய்யக் கோரி மீனவர்கள் போராட்டம்

author img

By

Published : Feb 10, 2021, 6:28 PM IST

ராமநாதபுரம்: இரட்டை மடி மீன்பிடி முறையை தடை செய்யக் கோரி ராமேஸ்வரம் மீன்பிடி துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fisherman protest
மீன்வர்கள் போராட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தங்கச்சிமடம் உள்ளிட்ட பல்வேறு கடல் பகுதிகளில் தொடர்ந்து மீனவர்கள் பலர் இரட்டைமடி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கடல் வளம் அழிவதோடு, மீன்களின் இனப்பெருக்கமும் குறையவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த முறை மீன் பிடிப்புக்கு பல அரசு அலுவலர்களும் உடந்தையாக செயல்படுவதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இந்த மீன் பிடிப்பு முறையை முற்றிலுமாக தடுத்து நிறுத்தக்கோரி பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மீன்வளதுறை அலுவலகத்தை முற்றுகையிட்டு மீனவர் கூட்டமைப்பினர் இன்று (பிப். 10) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்துக்கு தனுஷ்கோடி பாரம்பரிய மீனவர்கள் நல கூட்டமைப்பு செயலாளர் அமுதன் தலைமை வகித்தார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் ஒன்பதாவது நாளாக தொடரும் அரசு ஊழியர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.