ETV Bharat / state

ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள்!

author img

By

Published : Nov 28, 2020, 12:52 PM IST

மீன்வளத்துறையின் அனுமதியையடுத்து, ஒரு வாரத்திற்கு பின்னர் இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள்
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள்

இராமநாதபுரம்: நிவர் புயல் எச்சரிக்கை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறை அறிவிப்பு வெளியிட்டது.

இதனால் கடந்த ஒரு வார காலமாக இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தங்கச்சிமடம், மூக்கையூர், ஏர்வாடி, தேவிப்பட்டினம் ஆகிய பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடி செல்லவில்லை. 1,800க்கும் மேற்பட்ட விசைப்படகு, நாட்டு படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.

இதனையடுத்து நிவர் புயல் கடந்த 26 ஆம் தேதி அதிகாலை புதுச்சேரி மரக்காணம் அருகே கரையை கடந்தது. இந்நிலையில் இன்று (நவ.28) முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனவே, இராமேஸ்வரம் துறைமுக மீன்வளத்துறை அலுவலகத்தில் அனுமதி டோக்கன் பெற்று ஒரு வாரத்திற்கு பிறகு 500க்கும் மேற்பட்ட விசை படகுகள் 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆர்வத்துடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: நிவர் புயலால் பூ வரத்து குறைவு; கார்த்திகை தினத்தில் விலை கடும் உயர்வு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.