ETV Bharat / state

புரெவி புயல் தாக்கம்: கரைதட்டிய படகுகள்!

author img

By

Published : Dec 4, 2020, 6:20 PM IST

ராமநாதபுரம்: புரெவி புயலால் வீசிய சூறைக்காற்று குந்துகால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட படகுகள் கரைதட்டின.

boats were washed ashore
boats were washed ashore

புரெவி புயல் தாக்கம் காரணமாக படகுகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் பத்திரமாக கடந்த வாரம் குந்துகால் பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. நேற்று(டிச.3) இரவு முதல் இன்று(டிச.4) காலை வரை இருந்த சூறைக்காற்றாலும், புயலின் தாக்கம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி அதே பகுதியில் நிலை கொண்டுள்ளது.

கரைதட்டிய படகுகள்

குந்துகால் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட படகுகளில் 50க்கும் மேற்பட்ட படகுகள் காற்றின் வேகத்தால் கரையில் மோதி நிற்கின்றன. அந்த படகுகளை மீண்டும் கடலுக்கு இழுத்துச் செல்லும் கடினமான பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சில படகுகளில் சேதம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், படகுகளின் சேதத்தை ஆய்வு செய்தே தெரிந்து கொள்ள முடியும் என்று மீன்வளத்துறை சேர்ந்த அலுவலர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாளை (டிச. 5) மாலை கேரளா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.