ETV Bharat / state

புகையிலை பொட்டலங்கள் கடத்திய நான்கு பேர் கைது!

author img

By

Published : Jun 24, 2020, 1:47 PM IST

ராமநாதபுரம்: முதுகுளத்தூர் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொட்டலங்களை கடத்திவந்த இருவர் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Four person arrested for smuggling tobacco packetsin ranathapuram
புகையிலை பொட்டலங்கள் கடத்தியவர்கள் கைது

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பரமக்குடியில் இருந்து காக்கூர் நோக்கி கார் ஒன்றுவந்தது. அந்தக் காரை நிறுத்தி காவலர்கள் சோதனை செய்தனர்.

அப்போது அதில் தடைசெய்யப்பட்ட 100 பாக்கெட் புகையிலை, 37 மூட்டை அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காரில் வந்த சேலத்தை சேர்ந்த ஓட்டுநர் அய்யாத்துரை, உதவியாளர் நடராஜன் ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிக்கல் பகுதியைச் சேர்ந்த சகுபர் சாதிக், சர்புதீன் ஆகியோரிடம் கொடுப்பதற்காக இவைகள் காரில் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து, சகுபர் சாதிக், சர்புதின் ஆகிய இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: சென்னை அண்ணா பல்கலை விடுதியில் கரோனா சிகிச்சை? துணை ஆணையர் பதில்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.