ETV Bharat / state

அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து: 5 பேர் காயம்

author img

By

Published : Dec 27, 2022, 12:06 PM IST

புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளூர் பிரிவு சாலை அருகே அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்தனர்.

அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து
அரசு பேருந்து மீது வேன் மோதி விபத்து

புதுக்கோட்டை: சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு திருச்சியிலிருந்து மதுரை நோக்கி சென்ற அரசு பேருந்து மீது மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்த வேன் மோதி இன்று (டிச. 27) விபத்துக்குள்ளானது.

இதனையடுத்து காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ்க்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். இதில் காயமடைந்த ஐந்து பேருக்கு கொடும்பாளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக 50-க்கும் மேற்பட்டோர் உயிர் தப்பினர்.

அரசு பேருந்து மற்றும் வேன் இரண்டும் விராலிமலை காவல் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

கொடும்பாளூர் பிரிவு சாலையில் தொடர்ந்து விபத்து ஏற்பட்டு வருவதாகவும், அந்த இடத்தில் பேரிகார்டுகள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையும் படிங்க: தொடர் விடுமுறை: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.