ETV Bharat / state

சரக்கு வாகனம் மோதி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 29, 2019, 7:02 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மீது சரக்கு வாகனம் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

road-accident

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை மீன் ஏற்றி வந்த மினி டெம்போ அவ்வழியாகச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனின் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் அவர் தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மீமிசல் காவல் ஆய்வாளர் பாஸ்கரனுடன் மற்ற காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மினி டெம்போ ஓட்டுநரை கைது செய்தனர். அதையடுத்து சுப்பிரமணியன் உடல் உடற்கூறாய்விற்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உதவி ஆய்வாளர் சுப்பிரமணியனை மோதிய கனரக வாகனம்
Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதிக்குட்பட்ட மீமிசல் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மீது கனரக வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார்.


புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் கிழக்கு கடற்கரை சாலையில் இன்று காலை மீன் ஏற்றி வந்த மினி டெம்போ அவ்வழியாகச் சென்ற காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மீது மோதியது இதில் சுப்பிரமணியன் தூக்கிவீசப்பட்டு தலையில் காயம் ஏற்ப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மீமிசல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கனரக வாகனம் ஓட்டி வந்த ஓட்டுனரை கைது செய்தனர். மேலும் சிறப்பு சுப்பிரமணியன் உடலை கைப்பற்றி மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.