ETV Bharat / state

வங்கியில் லோன் வாங்கி தருவதாகக் கூறி பண மோசடி செய்த நபர் கைது

author img

By

Published : Oct 6, 2019, 11:40 AM IST

புதுக்கோட்டை: இலுப்பூர் பகுதியில் வங்கியில் லோன் வாங்கி தருவதாகக் கூறி ஒரு லட்சம் மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காவல்துறையினர்

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரகாஷ் என்பவர் வங்கிகளில் லோன் வாங்கி தருவதாகக் கூறி விஸ்டிங்கார்ட், துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளார். அவரின் இந்த விளம்பரத்தை பார்த்த இலுப்பூர் அருகே உள்ள மாரப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் (30) என்பவர் பிரகாஷை போனில் தொடர்புகொண்டு தனக்கு பத்து லட்சம் லோன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார்.

money forgery case 1 arrested and seized 1.50 lakhs
பிரகாஷ் வழங்கிய துண்டு பிரசுரம்

இதையடுத்து ஜெயராஜின் வீட்டிற்குச் சென்ற பிரகாஷ், அவரிடம் அசல் ஆவணங்களை பார்க்க வேண்டும் எனக் கூறி அனைத்தையும் பார்த்திருக்கிறார். அப்போது அவரது ஏடிஎம் கார்டை எடுத்துவிட்டு அதற்கு பதிலாக போலி ஏடிஎம் கார்ட்டை ஜெயராஜிடம் கொடுத்துள்ளார். மேலும், வங்கியில் பத்து லட்சம் லோன் பெற வேண்டுமென்றால் உங்களின் வங்கி கணக்கில் ரூ. 1.50 லட்சம் பணம் இருக்க வேண்டும் என்று கூறிய பிரகாஷ், பணத்தை வங்கியில் செலுத்தியவுடன் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார்.

இதை உண்மை என நம்பிய ஜெயராஜ், மறுநாள் அவரது வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் செலுத்தியுள்ளார், பின் பணத்தை போட்ட விபரத்தையும் பிரகாஷ்சிடம் கூறியுள்ளார். இந்த சந்தரப்பத்தை பயன்படுத்திய பிரகாஷ் பணத்தை எடுத்துகொண்டார்.

ஜெயராஜ் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முயன்றபோது ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் இருந்துள்ளது. பின்னர் அவர் வங்கியை தொடர்பு கொண்டபோது அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டு போலியானது என தெரியவந்தது. அதன்பின்னர் ஜெயராஜ், உடனடியாக பிரகாஷை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது பிரகாஷின் செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயராஜ் இலுப்பூர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார்.

Pudukkottai police arrested 1 and seized 1.50 lakhs in money forgery case
பண மோசடியில் ஈடுபட்ட பிரகாஷ்

அதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கீரனூர் பகுதியில் பதுங்கியிருந்த பிரகாஷை கைதுசெய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் சோமசுந்தரம் மகன் என்பதும் இது போன்று மோசடி வேலையில் ஈடுபடுவதும் தெரியவந்தது.

இதனையடுத்து அவரிடம் இருந்த ரூ.95 ஆயிரம், லேப்டாப், இரண்டு செல்போன்கள், 40 போலி ஏடிஎம் கார்டுகள், போலி ஆதார் கார்டு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள், இருசக்கர சக்கர வாகனம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க: ராணுவ வீரர் என்று கூறி 1 லட்சம் ரூபாய் மோசடி!

Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் லோன் வாங்கி தருவதாக கூறி 1-50 லட்சம் மோசடி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இலுப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிப்டாப் ஆசாமி ஒருவர் வங்கிகளில் லோன் வாங்கி தருவதாக கூறி விஸ்கார்ட் மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கி வந்துள்ளார். இந்த நிலையில் இலுப்பூர் அருகே உள்ள மாரப்பட்டியை சேர்ந்த ஜெயராஜ் (வயது-30) என்பவர் அவரை போனில் தொடர்புகொண்டு எனக்கு 10 லட்சம் லோன் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து வாங்கிகொண்டு மீண்டும் இரண்டு நாட்கள் சென்று ஜெயராஜ் வீட்டிற்கு சென்ற பிரகாஷ் அவரிடம் ஒரிஜினல் ஆவணங்களை பார்க்க வேண்டும் என கூறி அனைத்தையும் பார்த்துவிட்டு அவரது ஏடிஎம் கார்டை வாங்கிக்கொண்டு வேறு போலி ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு உங்களுக்கு 10 லட்சம் லோன் வேண்டும் என்றால் உங்கள் வங்கி கணக்கில் 1.50 பணம் இருக்க வேண்டும் பணத்தை வங்கியில் கட்டியவுடன் என்னை தொடர்புகொள்ளுங்கள் என கூறிவிட்டு சென்றுவிட்டார்
இது உண்மை என நம்பிய ஜெயராஜ் மறுநாள் அவரது வங்கி கணக்கில் ரூ.1.50 லட்சம் கட்டியுள்ளார் பணத்தை போட்ட விபரத்தையும் பிரகாஷ்சிடம் கூறியுள்ளார் இந்த சந்தரப்பத்தை பயன்படுத்தி பிரகாஷ் பணத்தை எடுத்துவிட்டார்.இந்தநிலையில் ஜெயராஜ் ஏடிஎம் சென்று பணம் எடுக்க முயன்றபோது ஏடிஎம் கார்டு வேலை செய்யவில்லை பின்பு வாங்கியை தொடர்பு கொண்டபோது தான் இது தனது ஏடிஎம் கார்டு இல்லை என்பது தெரியவந்தது
அதன்பின்னர் பிரகாஷ்சை தொடர்பு கொண்டபோது அவரது செல்போனை சுவிட்ச்ஆப்பில் இருந்துள்ளது அப்பொழுதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயராஜ் இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை பெற்று விசாரணை தொடங்கிய இன்ஸ்பெக்டர் மனோகரன், சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிரகாஷ் கீரனூர் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலிசார் அவரை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் மூலப்பாளையம் சோமசுந்தரம் மகன் பிரகாஷ் என்பதும் இது போன்று மோசடி வேலையில் ஈடுபடுவதும் தெரியவந்தது இதனையடுத்து அவரிடம் இருந்து பணம் 95-ஆயிரம் லேப்டாப், செல்போன் 2, போலி ஏடிஎம் கார்டு 40, போலி ஆதார்கார்டு, பான்கார்டு, டிரைவிங் லைசன்ஸ் உள்பட ஆவனங்கள், இருசக்கர சக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது மேலும் அவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.