ETV Bharat / state

திருமயம் துணை காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம் - எதிர்ப்பு தெரிவித்து 30 பேர் ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Apr 18, 2020, 8:49 PM IST

புதுக்கோட்டை: திருமயம் துணை காவல் ஆய்வாளர் பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்டோர் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

காவலருக்கு ஆதரவாக 30 பேர் ஆர்ப்பாட்டம்
காவலருக்கு ஆதரவாக 30 பேர் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் துணை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சுதர்சன். இவர் திருமயத்தில் பணியாற்றிய போது வாட்ஸ்-ஆப் குரூப் ஒன்றை தொடங்கி அதற்கு திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் என பெயரிட்டு அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்களை ஒன்று திரட்டி உடற்பயிற்சி அளித்து வந்தார்.

இதனிடையே சுதர்சனுக்கு நிர்வாக ரீதியாக இடமாற்றம் அளித்து மேலதிகாரிகள் உத்தரவிட்டனர். இதனை அறிந்த திருமயம் ஸ்போர்ட்ஸ் கிளப் உறுப்பினர்கள் சுதர்சனனை இடமாற்றம் செய்யும் நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

இந்நிலையில் இன்று திருமயத்தைச் சேர்ந்த முகமது இலியாஸ் தலைமையில் சுமார் 30 பேர் திருமயம் அரசுப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் திரண்டு சுதர்சன் இடமாற்றத்தை கைவிட வேண்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையறிந்த காவல் துறையினர் அங்கு சென்று அனைவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ரத்தத் சொட்ட மதுவை கொள்ளையடித்த மது வெறியன்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.