ETV Bharat / state

பால் வண்டி மோதி இளைஞர் உயிரிழப்பு

author img

By

Published : Sep 9, 2020, 5:11 PM IST

புதுக்கோட்டை: கீரமங்கலம் சாலையில் பால் வண்டி மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் உயிரிழந்தார்.

pudukkottai
pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜமான் (22). இவர் கீரமங்கலம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்றபோது, எதிரே வந்த தனியார் பால் நிறுவனத்தின் வாகனம் மோதியதில் இவருக்கு மூக்கு, மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் ராஜமானை கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை அளிக்க முடியாததால் மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே ராஜமான் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பால் வண்டியை ஓட்டி வந்த தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியைச் சேர்ந்த மணிகண்டன் (22) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து கீரமங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதையும் படிங்க:சென்னை மாநகராட்சி ஊழியர் மினி பேருந்தில் சிக்கி உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.