ETV Bharat / state

மீனவர் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது!

author img

By

Published : Apr 1, 2021, 7:44 PM IST

புதுக்கோட்டை: நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து மாயமான ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவரின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது.

மீனவர் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்யும் அலுவலர்கள்
மீனவர் உடலைக் கைப்பற்றி ஆய்வு செய்யும் அலுவலர்கள்

ராமேஸ்வரம் மண்டபத்திலிருந்து கடந்த 22ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கார்மேகம், நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக தவறி விழுந்து மாயமானார். இதனைத் தொடர்ந்து சக மீனவர்கள், கடலோரக் காவல் படையினர் மாயமான மீனவரைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல். 1) கோட்டைப்பட்டினம் தெற்கு தெரு கடற்கரையில் மீனவர் கார்மேகத்தின் உடல் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்த பகுதி மீனவர்கள்,அரசு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆய்வாளர் முத்துக்கண்ணு, மீன்வளத்துறை அலுவலர்கள் ஆகியோர் மீனவரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: தாதா சாகேப் பால்கே விருதின் பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.