ETV Bharat / state

புதுக்கோட்டையில் ஐவருக்கு கரோனா; மறைமலை நகர் முடக்கம்!

author img

By

Published : Apr 20, 2021, 7:27 PM IST

புதுக்கோட்டை: மறைமலை நகர் பகுதியில் ஐவருக்கு கரோனா தொற்று உறுதியானதால் அப்பகுதி சுகாதாரத் துறையினரால் முடக்கப்பட்டது.

புதுக்கோட்டையில் ஐவருக்கு கரோனா
புதுக்கோட்டையில் ஐவருக்கு கரோனா

புதுக்கோட்டை மாவட்டம் 41ஆவது வார்டுக்கு உட்பட்ட மறைமலை நகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவருக்கும் கரோனா தொற்று உறுதியானது.

இதுகுறித்து தகவலறிந்ததும் அந்த பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு சுகாதாரத் துறையினரால் முடக்கப்பட்டது.

அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் முகக்கவசம், கிருமிநாசினி ஆகியவற்றை உபயோகப்படுத்த வேண்டும் என நகராட்சியினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : காங். எம்பி ராகுலுக்கு கரோனா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.