புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட அனைத்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் இணைந்து, தங்களது இணை இயக்குநர் ஒரு தரப்பினராகவே செயல்படுகிறார் என்பதைக் கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சியர் வந்து இதற்கான பதிலைக் கூறினால் மட்டும் தான், இங்கிருந்து கலைந்து செல்வோம் என்று தர்ணாவில் தொடர்ந்து ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: போதிய பயணிகள் இல்லாததால் 18 சா்வதேச விமானங்கள் ரத்து