ETV Bharat / state

தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் பலி!

author img

By

Published : Oct 2, 2019, 5:35 PM IST

புதுக்கோட்டை: அறந்தாங்கி அருகே வயல்வெளிகளில் மேய்ந்த புள்ளிமானை நாய்கள் கடித்ததில் சம்பவ இடத்திலேயே பலியானது.

Chital Deer

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தின் காடுகளில் புள்ளிமான்கள் உள்ளன. அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவரது வயல்வெளிகளில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. மானை அப்பகுதியில் சுற்றித் திரந்த நாய்கள் கடித்து குதறியதில் மான் பரிதாபமாக பலியானது. இது குறித்து வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

தெரு நாய்கள் கடித்து புள்ளிமான் பலி

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரக அலுவலர் ராஜசேகரன், கால்நடை மருத்துவர் பாலகிருஷ்ணன் இறந்த புள்ளிமானை உடற்கூறு ஆய்வு செய்த பின் அப்பகுதியில் புதைக்கப்பட்டது.

Intro:Body:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே செய்யானம் கிராமத்தில் வயல்வெளிகளில் மேய்ந்த புள்ளிமானை நாய்கள் துரத்திக் கடித்ததில் புள்ளிமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது

மணமேல்குடி தாலுகா செய்யானம் கிராமத்தைச் சேர்ந்த வயல்வெளிகளில் புள்ளிமான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்துள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 5 ற்க்கும் மேற்ப்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து மானைத் துரத்தி கடித்துள்ளது. அதனைக் கண்ட வயல்பகுதியில் வேலை பார்த்த பொதுமக்கள் நாய்களை துரத்திவிட்டு மானை மீட்டுள்ளனர். மீட்ட மானை இளைப்பாற்றுவதர்க்குள் மான் துடிதுடித்து இறந்துள்ளது.அதனைத் தொடர்ந்து வனத்துறையினரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்க்கு விரைந்த வனச்சரக அலுவலர் ராஜசேகரன், கால்நடை மருத்துவர் பாலக்கிருஷ்ணன் ஆகியோர் கடிபட்ட இறந்த புள்ளிமானை உடற்க்கூறு ஆய்வு செய்து பின்பு அங்கேயே அடக்கம் செய்தனர். அடக்கத்தின்போது வேட்டைத்தடுப்பு காவலர்கள் மரியம்சைமன், முத்துராமன் உள்ளிட்ட பொதுமக்கள் உடனிருந்தனர். வயல்வெளிகளில் சுற்றித் திரிந்த புள்ளிமான் நாய்களால் கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.