ETV Bharat / state

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு: விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்து உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 8:58 PM IST

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை தொடுத்த வழக்கில், வரும் அக்டோபர் 7ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு

புதுக்கோட்டை: விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கடந்த 2016 மற்றும் 2016-2021 வரை ஆறு ஆண்டுகளில் 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சி.விஜயபாஸ்கர், அவர் மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 2021ஆம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இரண்டு நாள்களாக நடைபெற்ற அந்த சோதனையில், 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றுகள், 19 ஹார்டு டிஸ்க்கள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து 19 மாதங்கள் கடந்த நிலையில், கடந்த மே மாதம் 22ஆம் தேதி, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் முன்னிலையில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது, 35கோடியே 79லட்சத்து 90ஆயிரத்து 81ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அப்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவருக்கும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த், செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி (நேற்று) மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார். மேலும் அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் எனவும் நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று (செப்.26) விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கின் விசாரணையை மீண்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு தடை கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

புதுக்கோட்டை: விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் தமிழக சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் கடந்த 2016 மற்றும் 2016-2021 வரை ஆறு ஆண்டுகளில் 35.79 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சி.விஜயபாஸ்கர், அவர் மனைவி ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகங்கள், இலுப்பூரில் உள்ள அவரது வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல் குவாரி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 2021ஆம் ஆண்டு ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இரண்டு நாள்களாக நடைபெற்ற அந்த சோதனையில், 23 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணம், 4.87 கிலோ தங்கம், 3.76 கிலோ வெள்ளி, 135 கனரக வாகனங்களின் பதிவுச் சான்றுகள், 19 ஹார்டு டிஸ்க்கள், புல்லட் ஆவணங்கள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து 19 மாதங்கள் கடந்த நிலையில், கடந்த மே மாதம் 22ஆம் தேதி, புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் முன்னிலையில், புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி இமயவரம்பன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவகர் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறையினர், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவர் மனைவி ரம்யா ஆகியோர் மீது, 35கோடியே 79லட்சத்து 90ஆயிரத்து 81ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 216 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது, அப்போதைய சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவருக்கும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் ஆஜராகினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த், செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி (நேற்று) மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார். மேலும் அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு பதிலாக வழக்கறிஞர்கள் ஆஜராகலாம் எனவும் நீதிபதி பூர்ணா ஜெய ஆனந்த் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கு, நீதிமன்றத்தில் நேற்று (செப்.26) விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா இருவரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், வழக்கின் விசாரணையை மீண்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு தடை கோரிய வழக்கு; மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.