ETV Bharat / state

அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து: உயிர்தப்பிய பயணிகள்!

author img

By

Published : Oct 26, 2019, 10:51 PM IST

புதுக்கோட்டை : தனியார் பேருந்து, சரக்கு வாகனம் ஆகியவற்றை லாரி முந்தி செல்ல முயன்றபோது எதிரே அரசு விரைவு பேருந்து வந்ததால், அடுத்தடுத்து பின் தொடர்ந்து வந்த வாகனங்கள் மோதி விபத்துள்ளானது.

தனியார் பேருந்து

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து வந்துள்ளது. அதனைப் பின்தொடர்ந்து ஆடுகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனமும், லாரியும் வந்துள்ளன. சத்தியமங்கலம் வரை பின்னே வந்த லாரி, பேருந்தையும், சரக்கு வாகனத்தையும் முந்தி செல்ல முயன்றபோது, புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி அரசு விரைவு பேருந்து வந்துள்ளது.

தனியார் பேருந்து
தனியார் பேருந்து

இதனையடுத்து விபத்து ஏற்படாமல் தடுக்க, லாரி ஓட்டுநர் உடனடியாக லாரியை நிறுத்தியுள்ளார். எதிரே வந்த அரசு பேருந்து ஓட்டுநர் பேருந்தை சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறக்கியுள்ளார்.

சரக்கு வாகனம்
சரக்கு வாகனம்

ஆனால் லாரியை பின்தொடர்ந்து வந்த தனியார் பேருந்து, சரக்கு வாகனம் இரண்டும் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளனூர் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து, விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க: கர்ப்பிணி மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவன் கைது!

Intro:Body:

புதுக்கோட்டை அருகே அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து அதிஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்.

திருச்சியில் இருந்து புதுக்கோட்டை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுள்ளது. அதனை பின் தொடர்ந்து சரக்கு வாகனம் ஒன்று ஆடுகளை ஏற்றி சென்றுள்ளது.
அதன் பின்னால் லாரி ஒன்று வந்துள்ளது.
அப்பொழுது புதுக்கோட்டை அருகே உள்ள சத்தியமங்கலம் என்னும் இடத்தில் லாரி டிரைவர் தனியார் பேருந்தையும் சரக்கு வாகனத்தையும் முந்தி செல்ல முயன்றுள்ளார் அப்போது எதிரே புதுக்கோட்டையில் இருந்து திருச்சியை நோக்கி அரசு விரைவு பேருந்து வந்துவிட்டது.
அந்த பேருந்து மேல் லாரி மோதாமல் இருக்க லாரி டிரைவர் திடிரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து மற்றும் சரக்கு வாகனம் இரண்டும் அடுத்தடுத்து லாரி மீது மோதியது
அப்போது எதிரே வந்த அரசு விரைவு பேருந்து லாரி மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்த போது சாலையோர பள்ளத்தில் இறங்கியது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதில் அதிஷ்டவசமா யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெள்ளனூர் போலீசார் போக்குவரத்தை சரி செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.