பெரம்பலூர் பாலக்கரை பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் கொத்துக்கறி என்னும் உணவகம் உள்ளது. புதியதாக திறக்கப்பட்டுள்ள இவ்வுணவகம் கலைநயத்துடனும் அழகுடனும் வாடிக்கையாளரைக் கவரும்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உணவகத்தின் உரிமையாளர் வாடிக்கையாளரை கவருவதற்கு பல்வேறு வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதிலொன்று உணவு உண்ண வருவபவர்களுக்கு விதைப்பந்து வழங்குவது.
மக்களிடைய மரம் வளர்ப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில், வேம்பு, புங்கன், கொன்றை உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகளை விதைப்பந்துகளாக ஆறு விதைப்பந்துகள் அடங்கிய பெட்டியை மகிழ்ச்சியுடன் வழங்குகின்றனர். விதைப்பந்துகள் குறித்த தெரியாதவர்களுக்கு அங்குள்ள பணியாளர்கள் விதைப்பந்துகள் குறித்து விளக்கம் கொடுக்கின்றனர்.
உணவகத்தின் இந்த முயற்சி வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மேலும், விதைப்பந்துகள் வழங்கிவரும் உணவகத்தின் உரிமையாளரை பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: கால்களால் வாழ்க்'கை'யை வென்ற மாற்றுத்திறனாளி