நாமக்கல் மலைக்கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகள் மலைக்கோட்டையில் உணவுப்பொருட்கள், குளிர்பானங்களின் குப்பைகளை அங்கேயே விட்டு செல்கின்றனர். இந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று நாமக்கல் மலைக்கோட்டையில் உள்ள குப்பைகளை அகற்றும் பணியை மேற்கொள்ளும்போது குப்பைகளை நாமக்கல் புகழ்பெற்ற கமலாலய குளத்தில் கொட்டுகின்றனர்.
மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள கமலாலய குளத்தில் குப்பைகளை கொட்டுவதால் கமலாலய குளம் அசுத்தமடைந்து வருகிறது. நகராட்சி பணியாளர்களின் இந்த செயலால் தூய்மையான இந்த கமலாலய குளம் அசுத்தமடைந்து வருகிறது.
இதனால் குளத்திலிருந்து துர்நாற்றம் ஏற்படுவதோடு குளத்தில் உள்ள மீன்களும் அவ்வபோது செத்துமிதக்கின்றன. இதனை நகராட்சி நிர்வாகம் தலையிட்டு குப்பைகளை கமலாலய குளத்தில் கொட்டுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: