ETV Bharat / state

300 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல் : வட மாநிலத்தவர் 5 பேர் கைது

author img

By

Published : Jan 19, 2021, 1:02 PM IST

நாமக்கல்: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா ஆகியவற்றை பறிமுதல் செய்த பரமத்திவேலூர் காவல்துறையினர், அது தொடர்பாக 5 பேரை கைது செய்தனர்.

300 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல் : வட மாநிலத்தவர் 5 பேர் கைது
300 கிலோ குட்கா, பான் மசாலா பறிமுதல் : வட மாநிலத்தவர் 5 பேர் கைது

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சக்தி நகரில் உள்ள கடை மற்றும் வீடுகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவற்றை பதுக்கி வைத்து பல்வேறு கடைகளுக்கு மறைமுகமாக விற்பனை செய்து வருவதாக பரமத்திவேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜாரண வீரனுக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ரகசிய தகவல் தெரிவித்தனர்.

தகவலின்பேரில் காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கடை, வீடுகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது குடோனில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட ரூ. 1.50 லட்சம் மதிப்பிலான 300 கிலோ பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னர் விசாரணையில் வாடகைக்கு குடோன் எடுத்து குட்கா பொருள்களை சட்டவிரோதமாக விற்பனை செய்துவந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பிரவீன் (21), வாகாராம் (35), மதன்லால் (40), ரமேஷ் (24) லட்சுமண் ஜி (42) ஆகிய ஐந்து நபர்களையும் கைது செய்த பரமத்தி வேலூர் காவல்துறையினர், பரமத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி நாமக்கல் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:சட்டவிரோதமாக குட்கா பொருள்களைக் கடத்திய நபர் கைது: 200 கிலோ குட்கா பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.