நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ஆண்டாபுரம், அணியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூ பயிர்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன.
இந்தப் பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில் இன்று(அக்.23) நாமக்கல் பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை ஒட்டி பூக்கள் விற்பனை சூடுபிடித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ கிலோ ரூ.370-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனையாகின.
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.140-க்கு விற்பனையான முல்லை பூ கிலோ ரூ.3000-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மல்லிகை பூ வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவராத்திரியை ஒட்டி கோயில்களில் பூஜை நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாகவும், ஆயுதபூஜை முடியும் வரை பூக்களின் விலை அதிகரித்தே காணப்படும் எனவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.
பண்டிகையை ஒட்டி பூக்கள் விலை உயர்வு!
நாமக்கல்: ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி நாமக்கல் பூ மார்க்கெட்டில் பல்வேறு வகையான பூக்களின் விலையும் உயர்ந்துள்ளன.
நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி, ஆண்டாபுரம், அணியாபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் பூ பயிர்கள் பயிர் செய்யப்பட்டு உள்ளன.
இந்தப் பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று விற்பனை செய்கின்றனர்.
அந்த வகையில் இன்று(அக்.23) நாமக்கல் பூ மார்க்கெட்டில் ஆயுத பூஜையை ஒட்டி பூக்கள் விற்பனை சூடுபிடித்தது. கடந்த வாரம் கிலோ ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்ட அரளி பூ கிலோ ரூ.370-க்கும், ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட சம்பங்கி பூ கிலோ ரூ.150-க்கும் விற்பனையாகின.
இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.140-க்கு விற்பனையான முல்லை பூ கிலோ ரூ.3000-க்கும், கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட சாமந்தி பூ கிலோ ரூ.200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனால் பூ விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மல்லிகை பூ வரத்து அதிகமாக இருந்ததால் கடந்த வாரம் கிலோ 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மல்லிகை பூ கிலோ ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நவராத்திரியை ஒட்டி கோயில்களில் பூஜை நடைபெறுவதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதால் விலையும் ‘கிடுகிடு’ என உயர்ந்து இருப்பதாகவும், ஆயுதபூஜை முடியும் வரை பூக்களின் விலை அதிகரித்தே காணப்படும் எனவும் பூ வியாபாரிகள் தெரிவித்தனர்.