ETV Bharat / state

'அமாவாசை பௌர்ணமியான கதை' - வரலாற்று நினைவோடு வழிபாடு

author img

By

Published : Jan 25, 2020, 8:45 AM IST

நாகை: திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய அம்மனின் திருவிளையாடல் நிகழ்வை நினைவுகூறும் விதமாக சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு
திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் பிரசத்தி பெற்ற ஸ்தலமாகும். முன்னொரு காலத்தில் தை அமாவாசை தினத்தன்று, அம்மனை வழிபட வந்த சோழமன்னரிடம், அம்மனின் தீவிர பக்தரான அபிராமிபட்டர், இன்று பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த மன்னர், இன்று பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்றார்.

இதனையடுத்து, அபிராமி பட்டர் நெருப்பிற்கு மேலே 100கயிறுகள் கொண்ட ஊஞ்சல் அமைத்து அம்மனை நினைத்து, அபிராமி அந்தாதியை பாடினார். ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும், ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது, 79வது பாடல் பாடும்போது, அம்மன் நேரில் தோன்றி முழுநிலவை தோன்றச்செய்து, அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது.

திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு

அதன்படி, தை அமாவாசையான நேற்று நள்ளிரவு அம்மன் முன் பட்டரின் சிலை அமைக்கப்பட்டு, ஓதுவார்கள் ஒவ்வொரு பாடலாக பாடினர். ஒவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 79 பாடலின் முடிவில், நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாரதனை காட்டப்பட்டு, 100பாடல்கள் பாடி நிறைவுசெய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க:

'வீட்டைக் காணோம்' வடிவேலு பாணியில் கலெக்டரிடம் புகாரளித்த கூலித் தொழிலாளி!

Intro:புகழ்பெற்ற திருக்கடையூர் அபிராமிஅம்மன் ஆலயத்தில், அபிராமிபட்டருக்காக அமாவாசையை பௌர்ணமியாக்கிய திருவிளையாடல் வரலாறுப்படி நிகழ்த்தப்பட்டது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்:-Body:
நாகை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம் மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு தை அமாவாசை தினத்தன்று, அம்மனின் பக்தரான அபிராமிபட்டர், வழிபட வந்த சோழமன்னரிடம், பௌர்ணமி தினம் என்று தவறுதலாக கூறினார். இதனையடுத்து, பௌர்ணமி இல்லை என்றால், மரணதண்டனை விதிக்கப்படும் என்று மன்னர் கூறினார் இதனையடுத்து, அபிராமி பட்டர், எரியும் நெருப்பிற்கு மேலே ஊஞ்சல் அமைத்து அம்மனை நினைத்து, அபிராமி அந்தாதியை பாடினார், 100கயிறுகள் கொண்ட ஊஞ்சலில் ஒவ்வொரு பாடலுக்கும், ஒரு கயிறாக அறுத்துக்கொண்டு வரும்போது, 79வது பாடல் பாடும்போது, அம்மன் நேரில் தோன்றி தனது தோட்டை வீசி எறிந்து, முழுநிலவை தோன்றச்செய்து, அபிராமி பட்டருக்கு அருள் வழங்கியதாக ஆலய வரலாறு கூறுகின்றது. அதன்படி, தை அமாவாசையான இன்று நள்ளிரவு அம்மன் முன் பட்டரின் சிலை அமைக்கப்பட்டு, ஓதுவார்கள் ஒவ்வொரு பாடலாக பாடினர். ஓவ்வொரு பாடலுக்கும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. 79 பாடலின் முடிவில், நிலவு போன்ற தோற்றத்தில் அமைக்கப்பட்ட மின் விளக்கு எரியவிடப்பட்டது. தொடர்ந்து அம்பாளுக்கு மஹா தீபாராதனை நடத்தப்பட்டு, 100பாடல்கள் பாடி நிறைவுசெய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தருமபுர ஆதீன மடாதிபதி ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.