ETV Bharat / state

காய்கறி கடையில் மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி கைது!

author img

By

Published : Oct 3, 2020, 9:50 AM IST

நாகை: காய்கறி கடையில் சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த மூதாட்டி மற்றும் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மூதாட்டி
மூதாட்டி

நாகை மாவட்டம் நாகூர் அமிர்தா நகரில் உள்ள காய்கறி கடையில் புதுச்சேரி மாநில மதுபானங்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற நாகூர் காவல் துறையினர் காய்கறி கடையில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி மயிலம்மாள் மற்றும் ரபீக் ஆகிய இருவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர்.

காய்கறி கடையில் மதுபானம் விற்பனை செய்த மூதாட்டி

மேலும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: குத்தாலத்தில் போதைப் பொருள்கள் அழிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.