ETV Bharat / state

குழந்தையின்மையை சுட்டிக்காட்டியதால் பெண் தூக்கிட்டு தற்கொலை

author img

By

Published : Sep 7, 2020, 3:32 PM IST

மயிலாடுதுறை: குழந்தையின்மையை சுட்டிக் காட்டியும், வரதட்சணை கேட்டும் துன்புறுத்தியதால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையினர்
காவல் துறையினர்

மயிலாடுதுறை மாவட்டம் அனந்தநல்லூரைச் சேர்ந்தவர் புதுமலர்ச்செல்வி (32). இவருக்கும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் அந்நியூரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குருமூர்த்தி (40) என்பவருக்கும் 2013ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளாகவுள்ள நிலையிலும் இத்தம்பதியினருக்கு குழந்தையில்லை.

இதனால், குருமூர்த்தி நாள்தோறும் குடித்துவிட்டு புதுமலர்ச்செல்வியை அடித்து துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை காலை அந்நியூரில் புதுமலர்ச்செல்வி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து, தகவலறிந்த பாலையூர் காவல் துறையினர் உடலை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து, புதுமலர்ச்செல்வியின் சகோதரர் பூபாலன் அளித்த புகாரின் அடிப்படையில், பாலையூர் காவல் துறையினர் குருமூர்த்தியை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். திருமணம் ஆகி ஏழு ஆண்டுகள் நிறைவடையாததால், இதுகுறித்து ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, குருமூர்த்தியும் அவரது தாயார் சுசீலாவும் புதுமலர்ச்செல்வியை வரதட்சணை கேட்டும், குழந்தையில்லாத காரணத்தைக் கூறியும் கொடுமைப்படுத்தியதாக புதுமலர்ச்செல்வியின் உறவினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க:வரதட்ணை கேட்டு துன்புறுத்தியதால் ராணுவ வீரரின் மனைவி தற்கொலை முயற்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.