ETV Bharat / state

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Dec 12, 2020, 10:02 PM IST

புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி மயிலாடுதுறையில், மனிதநேய ஜனநாயக கட்சியினர் இன்று (டிசம்பர் 12) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி  போராட்டம்
வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டம்

மயிலாடுதுறை : மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தி மயிலாடுதுறை அருகே வானதி ராஜபுரம் பகுதியில் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இன்று (டிசம்பர் 12) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜமாத் நிர்வாகி நூர்முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி போராட்டம்

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில விவசாய அணி செயலாளர் அப்துல் சலாம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.

இதையும் படிங்க: 'விவசாயிகள் நலனை பாதுகாப்பதே மத்திய அரசின் நோக்கம்' - நரேந்திர சிங் தோமர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.