ETV Bharat / state

ஊரடங்கை மீறி மீன் வியாபாரம் செய்தவருக்கு அபராதம்!

author img

By

Published : May 31, 2021, 1:43 PM IST

மயிலாடுதுறை: ஊரடங்கு விதியை மீறி, மீன் வியாபாரம் செய்தவருக்கு நகராட்சி அலுவலர்கள் ரூ.20 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.

ஊரடங்கை மீறி மீன் வியாபாரம் செய்தவருக்கு அபராதம்
ஊரடங்கை மீறி மீன் வியாபாரம் செய்தவருக்கு அபராதம்

மயிலாடுதுறை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில் மயிலாடுதுறையில் உள்ள தியாகி சாரங்கபாணி மேம்பாலம் அருகில் உள்ள மீன் கடையில், ஊரடங்கு விதிமுறைகளை மீறி மீன் விற்பனை நடைபெறுவதாக, நகராட்சி அலுவலர்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் நகராட்சி ஆணையர் சுப்பையா உத்தரவின்பேரில், சுகாதார ஆய்வாளர்கள் பிச்சைமுத்து, ராமையன் தலைமையிலான நகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

ஆய்வில், கடையின் பின்புறம் மறைத்து வைத்து கடையின் உரிமையாளர் மீன் வியாபாரம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்து மீன்களை பறிமுதல் செய்த நகராட்சி அலுவலர்கள், அவருக்கு ரூ.20 ஆயிரம் அபராதமாக விதித்தனர்.

இதையும் படிங்க: ஆம்பூரில் ஊரடங்கு விதி மீறல்: இறைச்சி கடைகளுக்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.