ETV Bharat / state

உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை - திரளான பெண்கள் பங்கேற்பு

author img

By

Published : Feb 8, 2020, 11:58 AM IST

நாகப்பட்டினம்: சீர்காழி ஸ்ரீ விக்ரம நாராயண பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டனர்.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்

நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108 திவ்யதேசங்களில் 27ஆவது தலமான இங்கு எழுந்தருளியுள்ள உற்சவர் தாடாளன் பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார்.

இங்கு ஆண்டுதோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமைகளில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை (பிப். 07) உலக நன்மைக்காகவும், சுமங்கலி வரம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதலுடன் லோகநாயகிதாயார் சன்னதி முன்பு பெண்கள் 108 திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து, திருவிளக்கிற்கு மஞ்சள், குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்து, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னதாக லோகநாயகி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, தீபாரதனை நடைபெற்றன.

திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்கள்

இதையும் படிங்க: 'கட்டண தரிசனத்திற்கு மட்டும் லட்டு பிரசாதமா' - திருச்செந்தூரில் கேள்வி எழுப்பிய பக்தர்கள்

Intro:108 திவ்யதேசங்களில் 27 வது திவ்ய தேசமான சீர்காழி ஸ்ரீ விக்ரம நாராயண பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி பெண்கள் சிறப்பு திருவிளக்கு பூஜை.Body:108 திவ்யதேசங்களில் 27 வது திவ்ய தேசமான சீர்காழி ஸ்ரீ விக்ரம நாராயண பெருமாள் கோயிலில் உலக நன்மை வேண்டி பெண்கள் சிறப்பு திருவிளக்கு பூஜை.


நாகை மாவட்டம் சீர்காழியில் லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் மங்கலா சாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களில் 27 வது தலமான இங்கு எழுந்தருளியுள்ள உற்சவர் தாடாளன் பெருமாள் என்ற திருநாமத்துடன் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். இங்கு தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி தை மாதம் கடை வெள்ளிக்கிழமையான இன்று உலக நன்மைக்காகவும், சுமங்கலி வரம், குழந்தை பாக்கியம் என வேண்டுதலுடன் லோகநாயகிதாயார் சன்னதி முன்பு பெண்கள் 108 திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து திருவிளக்கிற்கு மஞ்சள்,குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முன்னாதாக லோகநாயகி தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை , தீபாரதனை நடந்தது.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.